தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க் – 3,700 ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை!!

0
தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க் - 3,700 ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை!!
தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க் - 3,700 ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை!!
தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க் – 3,700 ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை!!

ட்விட்டர் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைப்பு செய்திகளில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

பணி நீக்க நடவடிக்கை:

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எலான் மஸ்க் சொந்தமாக்கியிருந்தார். எலான் மஸ்க் தான் தேர்வு செய்யும் எந்த துறையிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யக்கூடியவர். மஸ்கின் EV டெஸ்லா கார்களுக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்பு தற்போது வரையிலும் இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனால் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குவதாக செய்திகள் பரவ தொடங்கியதில் இருந்து அடுத்தகட்ட வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் முதல் வேலையாக மஸ்க் அதன் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருந்து மஸ்க் பின்வாங்கும் போது உயரதிகாரிகள் நீதிமன்ற வழக்கு தொடுத்து, பேசிய வாதங்கள் தான் இந்த பணி நீக்கத்திற்கு காரணம் என்று பேசிக் கொள்ளப்பட்டது.

ஒரே நாளில் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்.. ஷாக் ரிப்போர்ட்!

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து, ப்ளூ டிக் விவகாரம் எழுந்தது. தற்போது மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து அதன் 50% ஊழியர்களான 3,700 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பண வீக்க காலத்தில் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த அதிரடி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!