1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகளை முடக்க முடிவு – எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கை!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 44 பில்லியன் டாலருக்கு ட்வீட்டரை எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் இதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ட்வீட்டரில் செயலற்று இருக்கும் கணக்குகளை நீக்க உள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
ட்வீட்டர்:
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ட்விட்டரை வாங்கியுள்ளார். இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி உள்ளார். இந்த கடன்களை திரும்ப செலுத்த ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுமார் 330 மில்லியன் பயனர்கள் ட்வீட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.
தமிழகத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் – மின் வாரியம் அறிவிப்பு.. மாண்டாஸ் புயலின் தாக்கம்!
Exams Daily Mobile App Download
இவர்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளைக் கண்டறிந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1.5 பில்லியன் பயனர் கணக்குகளை நீக்கம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதனால் ட்வீட்டரில் தவறான தகவல் பரவுவதைக் குறைக்க முடியும் என்றும் தளத்தின் தரவுகளை மேம்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.