இந்தியாவில் களமிறங்கும் டெஸ்லா? எலான் மஸ்க் கூறிய காரணம்!
இந்தியாவில் மற்ற நாடுகளை விட அதிக அளவில் இறக்குமதி வரி இருப்பதால் தான் எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எலெக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக, மக்கள் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் தங்களது கவனத்தினை செலுத்தி வருகின்றனர். இப்படியாக இருக்க, உலக அளவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து மக்களை கவர்ந்து வரும் முன்னணி நிறுவனமாக டெஸ்லா இருந்து வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தின் மூலமாக இன்று வரை இந்தியாவில் ஒரு கார் கூட அறிமுகப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய உத்தரவு!
உலக அளவில் இந்த நிறுவனம் முன்னிலையில் இருப்பதால் கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின் கிளை இந்தியாவில் தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கிடம் ஒருவர் ட்விட்டரில், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? என்று கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார். இதற்கு எலான் மஸ்க் தனது தரப்பு விளக்கத்தினை வழங்கியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த எங்களுக்கும் விருப்பம் தான். ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இறக்குமதிக்கான வரி அதிகமாக இருக்கிறது. இதனால் தான் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, இங்கு மட்டும் தான் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் ஒரே முறையில் நடத்தப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.