‘நான் மர்மமான முறையில் இறந்தால்’ – உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்க் பரபரப்பு ட்வீட்!
சமீபத்தில், மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் முடிவை அறிவித்த எலோன் மஸ்க் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சர்ச்சை பதிவு:
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலோன் மஸ்க் சமீப காலமாக பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் சலசலப்பை உருவாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இன்று (மே.9) தனது இறப்பு குறித்து ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலரை வாங்குவதற்கான தனது முடிவை அறிவித்த அவர் அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ‘நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு!
இந்த பதிவை வெளியிடுவதற்கு சற்று முன்னர், உக்ரைனில் உள்ள பாசிசப் படைகளுக்கு இராணுவத் தகவல் தொடர்பு உபகரணங்களை வழங்குவதில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய எலோன் மஸ்க் தகவல் தொடர்பு போல் தோன்றும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனால் உக்ரைனில் உபகரணங்கள் வழங்கப்பட்டதாக அந்த தகவல் தொடர்பு கூறி இருக்கிறது. இப்போது போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு உதவியதற்காக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க், ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறாரா என்ற ஊகத்தை இந்த இரண்டு பதிவுகளும் தூண்டி இருக்கின்றன.
Exams Daily Mobile App Download
கடந்த பிப்ரவரியில், எலோன் மஸ்க்கின் நிறுவனமான SpaceX ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையானது, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான தனது பங்களிப்பை கொடுத்திருந்தது. இப்படி இருக்க, மர்மமான சூழ்நிலையில் எலோன் மஸ்க் தனது மரணம் குறித்து வெளியிட்ட தற்போதைய ட்வீட், நகைச்சுவை முதல் எதிர்மறை விமர்சனங்கள் வரை பல்வேறு கருத்துக்களை எழுப்பி இருக்கிறது. அதாவது, மஸ்க் குடிபோதையில் இருக்கிறாரா, சீர்திருத்தத்தை கொண்டு வர அவர் வாழ வேண்டும் என்று சிலர் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.