வெடித்த புதிய சர்ச்சை.. ட்விட்டர் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்த எலான் மஸ்க்!
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புதிய செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்கம்:
மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ட்விட்டர் செயலியை சமீபத்தில் தான் டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் ஆன எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் வேலையாக தலைமை நிர்வாக பதவியில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார். அடுத்தபடியாக, ப்ளு டிக் பயனர்களுக்கு சில மாறுதல்களை செயல்படுத்தியுள்ளார்.
ஹாப்பி நியூஸ்.. பயங்கர சரிவை கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் இருந்து பாதி பெயரை அதிரடியாக பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய அறிவிப்பால், 3,700 பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளிக்கிழமை அன்று எலான் மஸ்க் அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் இந்த மாறுதல்கள் உலக மக்கள் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.