2022ம் ஆண்டில் 46% கூடுதலான சுங்க கட்டணம் வசூல் – மத்திய அரசு வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்!!
நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு தற்போது ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 46% அதிகமாக கட்டணம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுங்க கட்டணம்:
நாட்டில் இருக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கு தற்போது ஃபாஸ்டேக் என்னும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து சுங்க சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் – 7.6 % வட்டி .. முழு விவரம் இதோ!
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஃபாஸ்டேக் முறை இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 46% அதிகமான கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக ஃபாஸ்டேக் மூலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் அதிகமான வளர்ச்சியை கண்டுள்ளது
அதன்படி, கடந்த 2021ம் ஆண்டில் ரூ.34,778 கோடி சுங்க கட்டணம் வசூலான நிலையில், 2022ம் ஆண்டில் ஃபாஸ்டேக் மூலம் ரூ.50,855 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுமார் 46% கடந்த ஆண்டை விட அதிகமாக வசூலாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டில் 48% அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.