தமிழகத்தில் மின் கட்டண உயர்வு – எவ்வளவு யூனிட்டிற்கு எவ்வளவு விலையேற்றம்? முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் ஒரேடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வளவு யூனிட்டிற்கு எவ்வளவு மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்தான முழு விளக்கத்தையும் தற்போது தமிழ்நாடு மின்சார துறை வெளியிட்டிருக்கிறது.
மின் கட்டணம்:
பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மின்சார துறை ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இந்த மின் திருத்த முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, இன்று முதல் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2 மாதங்களுக்கு மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.4.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 யூனிட் முதல் 500 யூனிட் வரை மின்சாரம் செலவு செய்திருந்தால் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும், 500 முதல் 600 யூனிட் வரை மின்சாரம் செலவு செய்திருந்தால் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும், 600 முதல் 800 யூனிட் வரையிலான கட்டணம் ரூபாய் 9 வசூலிக்கப்படும் எனவும், 600 முதல் 800 யூனிட் வரையிலான கட்டணம் ரூபாய் 10 வசூலிக்கப்படும் எனவும், 800 முதல் 800 யூனிட் வரையிலான கட்டணம் ரூபாய் 11 வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிய விரும்புபவரா? உடனே விரையுங்கள்!
Exams Daily Mobile App Download
மேலும், மாநில அரசு மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால் வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்கள் மின் கட்டணமாக ரூபாய் 1800 செலுத்த வேண்டும் எனவும், அரசு மானியம் பெறுபவர்கள் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவசமாக எந்த மின் கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும், இரண்டாவது 100 யூனிட்டுக்கு 50 சதவீதம் தள்ளுபடியுடன் மீத தொகையை செலுத்த வேண்டும் எனவும், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மின் கட்டணமாக ரூ 1125 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்