மீண்டும் அமலுக்கு வரும் மின்கட்டண உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி மின்கட்டணம் உயர்வு அமல்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்கட்டணம் உயர்வு:
கர்நாடகா மாநிலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மின்சார கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மின்கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மின் வினியோக நிறுவனங்கள் மூலமாக தான் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அங்கே மாதந்தோறும் மின்சார அளவு கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
கடந்த ஏப்ரல் மாதம் ஒரு யூனிட்டிற்கு 35 பைசா மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது நிலக்கரி விலை உயர்வு, அனல்மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் மீண்டும் மின்கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டண உயர்வு ஒவ்வொரு மின்வினியோக நிறுவனங்களுக்கும் இடையே வெவ்வேறு அளவில் உயர்த்தப்படுகிறது. அதன் படி பெங்களூரு மின்சார வினியோக நிறுவன(பெஸ்காம்) எல்லை பகுதிகளில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 31 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் – பணம் ‘இவர்களுக்கு’ மட்டும் தான்!
அதே போல உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன(ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் ஒரு யூனிட்டிற்கு 27 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக நிறுவன(கெஸ்காம்) எல்லை பகுதிகளில் ஒரு யூனிட்டிற்கு 26 பைசாவும், மங்களூரு மின்சார வினியோக நிறுவன(மெஸ்காம்) எல்லை பகுதிகளில் ஒரு யூனிட்டிற்கு 21 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. மேலும் இவை அடுத்த 6 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் 50 யூனிட் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் ரூ.523 லிருந்து ரூ 545 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரண்டாவது முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் அதனை நடத்தி வருபர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே பெட்ரோல் விலை அதிகரிப்பு இருந்தது. அதனால் தொழில் முனைவோர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.