தமிழகத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் – மின் வாரியம் அறிவிப்பு.. மாண்டாஸ் புயலின் தாக்கம்!
வங்கக்கடலில் உருவாகிய மாண்டாஸ் புயல் தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மின்சாரம்:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாண்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் இப்புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இப்புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இரவு அரசு பேருந்துகள் இயங்காது என்றும் போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக், சென்னை & அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – கனமழை எதிரொலி!
Follow our Instagram for more Latest Updates
அதனால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மின்சாரமும் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது இந்த மாண்டாஸ் புயல் கரையை கடக்கும் போது வீசும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் மின் தொடர்பான பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.