தமிழகத்தில் மின் கணக்கீடு பணிகள் தொடக்கம் – ஜூன் 15 உடன் சலுகைகள் முடிவு!
தமிழகத்தில் இனி மின்சாரம் கணக்கிடும் பணிகள் வழக்கம் போலவே நடைபெறும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்திருந்த சலுகைகள் ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கணக்கீடு பணிகள்:
கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. நாள் ஒன்றிற்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமோர் இந்த நோய் தாக்கத்தால் பாதிப்படைந்தும், 400க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து வந்தனர். இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே போல் கொரோனா பரவல் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின்சார கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான நடவடிக்கைகள் – அதிகாரிகள் மும்முரம்!
இதற்கு தீர்வாக தமிழக அரசு பல வித சலுகைகளை மக்களின் நலனுக்காக அறிவித்தது. அதில் குறிப்பிட்ட மாதத்திற்கான மின் கட்டணத்தை தங்களது உதவி பொறியாளரிடம் நுகர்வோர் தெரிவிக்கலாம், அதன் மூலமாக கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை மின்வாரியம் மக்களுக்காக வழங்கியது.
TN Job “FB Group” Join Now
இப்படியாக இருக்க, இந்த சலுகைகள் ஜூன் மாதம் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும், இனி வரும் நாட்களில் வழக்கம் போல மின் கணக்கீடு செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மீண்டும் மின்சார வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று நேரடியாக மின்சாரத்தினை கணக்கீடு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்தாமல் அதிரடி அரசு செய்வது எல்லாம்…. கைகளில் பூமாலையே