சென்னையில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூலை 6ம் தேதியான நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின் சார்ந்த பணிகள்:
தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளை தவிர்ப்பதற்காக மின் ஊழியர்கள் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நாளை புதன்கிழமை ஜூலை 6ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கிண்டி, அடையாறு, மாதவரம், தாம்பரம், ஐடி காரிடர், கே.கே நகர், அம்பத்தூர், ஆவடி, வியாசர்பாடி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போரூர், அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், சுப்புலட்சுமி நகர் மற்றும் ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, க.க.நகர் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி, தசரதபுரம் பகுதி, பகுதி, க.க.நகர் மேற்கு மற்றும் பகுதிகள் மட்டுமின்றி பாடி அப்பாதுரை தெரு, டி.எம்.பி நகர், காமராஜ் தெரு, பெரியார் தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும், கிண்டி மற்றும் ஆவடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், தசரதபுரம், நங்கநல்லூர் மடிப்பாக்கம் ஷீலா நகர், குபேரன் நகர், பெரியார் நகர் மூவரசம் பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ராகவா நகர், அண்ணாநகர் புழுதிவாக்கம் ராஜா தெரு, ராகவன் நகர், அம்மன் நகர் மற்றும் புதிய காவலர் (சி.டி.எச் ரோடு) குடியிருப்பு, வி.ஜி.என். ஸ்டாபோர்டு, உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அடையார் பகுதிக்கு உட்பட்ட டைகர் வராதாசாரியர் தெரு, ருக்குமணி ரோடு, அஷ்டலட்சுமி கார்டன், திருமுருகன் தெரு சாஸ்தரி நகர் 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், டைடல் திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு பெசன்ட் நகர் கங்கை தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எல்.ஐ.சி காலனி, காமராஜர்நகர் அடையார் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் நியூ பிச் ரோடு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளன.
ஐடி காரிடர், மாதாவரம் மற்றும் வியாசர்பாடி துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் பெரும் பகுதிகளான துரைப்பாக்கம் சுப்பராயன் நகர், பாண்டியன் நகர், பாலமுருகன் கார்டன் தரமணி அண்ணா நெடுஞ்சாலை, கோவிந்தசாமி நகர், ஜி.கே மூப்பனார் தெரு திருவான்மியூர் ராமலிங்கம், வ.உ.சி தெரு மற்றும் ஜிஎன்டி ரோடு, மா.போ,சி வேதா தெரு, கனகசத்திரம், தட்டான்குளம் ரோடு பகுதி மற்றும் வி.எஸ்.மணி நகர், கிருஷ்ணா நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம், கே.கே.ஆர் நகர், அம்பத்தூர் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
சென்னை ICF ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 876 காலிப்பணியிடங்கள்! முழு விவரம்!
அதனைத்தொடர்ந்து, தாம்பரம் பகுதிகளான பெரும்பாக்கம் மெயின் ரோடு, முனுசாமி நகர், புஷ்பா நகர் சிபிஐ காலனி, ரங்கநாதபுரம் , மாடம்பாக்கம் மெயின் ரோடு, மாருதி நகர், திருமகள் நகர், திருவள்ளுவர் தெரு, ராஜாஜி நகர், ராஜகீழ்பாக்கம் வேணுகோபால சுவாமி நகர், ரங்கா நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.