தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளை, மேலப்பாளையம் மற்றும் மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கோள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அவ்வப்போது எதிர்பாராத விதமாக மின்னிணைப்பு துண்டிப்பு, மின்கசிவு ஆகியவை ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்சாதனங்கள் அனைத்தும் சார்பார்க்கப்படுகிறது. மேலும், மின்கம்பங்களில் பழுதான வயர்கள் அனைத்தும் மாற்றப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நெல்லை மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்க்கலாம். அதாவது, மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம். பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் அலுவலக பணியாளர்கள் நியமனம் – புதிய உத்தரவு வெளியீடு!
மேலும், பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின் நிலையங்களை சேர்ந்த மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம். சமாதானபுரம், கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தை சேர்ந்த மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளன்குளம் ஆகிய பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்