தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்தில் நாளை ( ஆகஸ்ட் 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். அதனால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை முன்கூட்டியே செய்து விடுகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் யு.உசிலம்பட்டி, மறவர்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்கம்பட்டி, கோணாம்பட்டி, சாத்தியார் அணை, ஏர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி ஆகிய பகுதிகளால் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp அக்கௌன்ட்டுடன் இணைப்பது எப்படி?

அதனை தொடர்ந்து கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன் குளம், ஆதனூர், பாலமேடு, அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழ சின்னம்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆகஸ்ட் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!