தமிழகத்தில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் நாளை ஜூன் 16 அன்று ராஜபாளையம் அருகே இருக்கும் தொட்டியபட்டி உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மின் கம்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் ஆபத்துகள் நேரிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் இந்த பராமரிப்பு பணியை ஒவ்வொரு மாதமும் தவறாமல் மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அவ்விதமாக நாளை (ஜூன் 16) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அம் மின்நிலையத்திலிருந்து விநியோகம் பெரும் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். அதாவது விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
ஜூன் 26 வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!
ஆதலால் புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காப்பேரி, கலங்காேபரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தகவல் வெளியிட்டுள்ளார்.