தமிழக மக்களுக்கு மின் வாரியம் முக்கிய அறிவிப்பு – நாளை மின்தடை!
தமிழகத்தில் மின் வாரியம் சார்பில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 25) மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் 2020 செப்டம்பர் மாதம் முதல் சுமார் 9 மாத காலத்திற்கு மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு தற்போதைய புதிய அரசு இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்கள் மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கல்வி டிவி அட்டவணை பெற்றோருக்கு வழங்கல் – ஆணையர் உத்தரவு!
இதையடுத்து தமிழகத்தில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (ஜூலை 25) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. தற்போது இது குறித்து சிவகாசி மின்வாரிய பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை, நீதிமன்றம், கருமன்கோவில் ரோடு, விளாம்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, வீரார்பட்டி, மேல்கோட்டையூர், சிறுகுளம், நல்லன்செட்டிபட்டி, சிவந்திப்பட்டி, குண்டலத்தூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.