தமிழகத்தில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் ஆதார் எண் இணைத்திருந்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும் என சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம்
தமிழகத்தில் மின்சாரத்துறையில் பல்வேறு சீர்த்திருங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் கட்டணம் செலுத்துபவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணம் செலுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் காட்டுத்தீ போன்று பரவி வருகின்றது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறியிருப்பதாவது, மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியமானது. ஆனால் 100% கண்டிப்பாக மின் இணைப்பு பெற்றவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏனெனில் மின் இணைப்பு பெற்றவர்கள் இறந்திருந்தால் அவர்கள் பெயர் நீக்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும் இதற்காக முதல்வரிடம் அனுமதி பெற்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
மகளிர் சுய உதவி குழுவினருக்கு மின்னணு வர்த்தக தளம் அறிமுகம் – இனி பொருட்களை விற்பது ஈஸி!!
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் மின்சாரத்துறையினர் அல்லது இத்துறை அமைச்சர் அல்லது முதல்வரிடம் கேட்டறிய வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.