தமிழகத்தில் மின்சாரம், குடிநீர் கட்டணம் அதிகரிப்பு? மாற்று வழி உண்டு!
மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று நிதித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து மின் உற்பத்தியை அதிகரிக்கும் மாற்று வழிகளை கையாள வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கட்டண உயர்வு:
தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது என நிதித்துறை செயலாளர் கூறியுள்ளார். அதை சமாளிக்க மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். உடனடியாக உயர்த்த படாவிட்டாலும் வெகு விரைவில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 19 முதல் 23 வரையுள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு விபரம் இதோ!
அதன் அடிப்படையில் மின்சாரக் கட்டணம், பேருந்து கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை உயர்த்தப்படும் என்ற அச்சம் எழுந்திருந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் இழப்பு ஏற்பட முக்கியக் காரணம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 1800 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை 16,000 மெகாவாட் ஆக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்து 6166 மெகாவாட் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5032 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
வெளிநாடுகளில் 1000 மெகாவாட் வரையிலான அனல் மின் திட்டங்கள் 51 மாதங்களில் நிறைவேற்றி முடிக்கப்படுகிறது. ஆனால் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மின்திட்டங்கள் அதிவேகத்தில் செயல்படுத்தி முடிக்கப்பட்டால் மின்சார உற்பத்தி செலவு குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக செயல்படுத்தி, மின்சார உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.