ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்க புதிய வழிமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

0
ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்க புதிய வழிமுறை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்க புதிய வழிமுறை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்க புதிய வழிமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக ‘6பி’ படிவத்தை பூர்த்தி செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை விளங்குகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்களிப்பது இந்தியாவில் உள்ள அனைவரின் முக்கிய கடமையாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டை தான் அனைத்து வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்கியது. தற்போது மத்திய அரசின் உத்தரவின் படி ஆதார் அனைத்து தேவைகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த நிலையில் ஆதார் அட்டையை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும் வங்கி கணக்கு, பான்கார்டு எண் போன்றவற்றுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதியில் செப்.27 பிரம்மோற்சவ விழா – ஏற்பாடுகள் தீவிரம்! கூடுதல் பேருந்து இயக்கம்!

நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணியில் 6பி என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக 6பி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை யின் நகல்களை அளிக்க வேண்டியது இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இந்த பணியினை தேசிய வாக்காளர் சேவை அமைப்பான என்விஎஸ்பி போர்ட்டல், வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம். இதை அடுத்து, இப்பணிகளை 2023 மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!