தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் EL விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!
தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனியாக ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் அந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தாமல் இருந்தால் ஆண்டு இறுதியில் 15 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஏகப்பட்ட நிதி தேவைப்பட்டது. அதனால் ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 கோடை விடுமுறை தொடக்கம்
அத்துடன் அந்த ஈட்டிய விடுப்பு, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 2021 -22 நிதியாண்டிலும் ஈட்டிய விடுப்புக்கு ஊதியம் பெறுவதை நிறுத்தி வைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த ஆண்டு மீண்டும் இந்த சலுகையை பெறலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடந்த 11 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தனியாக சுற்றறிக்கை ஒன்றை அரசு ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறது. அதில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், கல்வித்துறை ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், துறை இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.