PM கிசான் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க மே 31 கடைசி நாள்!
PM கிசான் திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்றுவரும் விவசாயிகள் eKYC செயல்முறையை மே 31 ஆம் தேதிக்குள் முடித்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் விவசாயிகளுக்கு 11 வது தவணை வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டம்:
பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். அதாவது இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 என்கிற வீதத்தில் வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகள் 10 தவணைகளில் PM கிசான் திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளனர். கூடிய விரைவில் 11 வது தவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் இந்த நிதியுதவியை பெற eKYC ன் செயல்முறையை முடிப்பது மிகவும் அவசியமாகும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை – 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்!
eKYC ன் செயல்முறையை முடிக்க மே 31 தான் கடைசி தேதி என்பதால் விரைவில் முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 11 வது தவணை நிதியுதவியை பெற விரும்பும் விவசாயிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்ற வேண்டும். அதாவது, PM கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வமான இணையதளமான www.pmkisan.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள ‘விவசாயிகள் மூலை’ என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, அதில் உள்ள புதிய விவசாயி பதிவு என்கிற பகுதியை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download
தற்போது எப்படி eKYC ன் செயல்முறையை முடிப்பது என்பதற்கான விளக்கத்தை காணலாம். முதலில் PM கிசானின் அதிகாரபூர்வமான இணையதள முகவரி pmkisan.nic.inக்கு சென்று ஃபார்மர்ஸ் கார்னர் பிரிவின் கீழ் உள்ள eKYC என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, அதில் ஆதார் எண்ணை பதிவு செய்து தேடல் என்கிற பகுதியை கிளிக் செய்யவும். ஆதார் எண்ணை பதிவு செய்ததும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனையும் பதிவு செய்துவிட்டால் eKYC செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்து விடும்.