தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் பணி உறுதி!
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், உள்ள காலிப்பணியிடங்களுக்கு தக்கார் தீர்மானத்தின்படி பணியாளர்கள் நியமனம் செய்ய உள்ளனர். இதற்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 26-11-2022ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பணியின் பெயர் | ஓதுவார், பரிச்சாரகர், காவலர், திருவலகு & கால்நடை பராமரிப்பாளர் |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்;
- ஓதுவார் – 1 பணியிடம்
- பரிச்சாரகர் – 1 பணியிடம்
- காவலர் – 1 பணியிடம்
- இரவு காவலர் – 1 பணியிடம்
- திருவலகு – 1 பணியிடம்
- கால்நடை பராமரிப்பாளர் – 1 பணியிடம்
இந்து சமய அறநிலையத்துறை பணிக்கான தகுதி விவரங்கள்:
ஓதுவார்:
- தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
பரிச்சாரகர்:
- தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- கோயிலின் பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்தியம் அட்டவணை மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
- பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
காவலர், இரவு காவலர், திருவலகு & கால்நடை பராமரிப்பாளர் :
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நாள் ஒன்றுக்கு ரூ.821/- சம்பளம்!
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 2022 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும், 45 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Follow our Instagram for more Latest Updates
சம்பள விவரம்:
- ஓதுவார் – ரூ.12600/-
- பரிச்சாரகர் – ரூ.13200/-
- காவலர் – ரூ.11600/-
- இரவு காவலர் – ரூ.11600/-
- திருவலகு – ரூ.10000/-
- கால்நடை பராமரிப்பாளர் – ரூ.11600/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முக தேர்விற்கு எந்த வித பயணப்படியும் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100/- ஐ செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை 27.10.2022 முதல் 26.11.2022 மாலை 5.00 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம். படிவங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை-3 என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும். 26.11.2022 மாலை 5.45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது