தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை கடும் சரிவு – ரூ.4.90 ஆக நிர்ணயம்!
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக இருந்த நிலையில் தற்போது 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை சரிவுக்கு முட்டை விற்பனையாகாமல் தேக்கம் அடைவதே காரணம் என்று கூறப்படுகிறது.
முட்டை விலை:
கடந்த 2020 ஆண்டில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய போது கோழி, முட்டை போன்றவையின் விற்பனை கடும் சரிவை கண்டது. முட்டை விற்பனையின் சரிவால் அதிகம் தேக்கம் அடைந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முட்டை விலையில் கடும் சரிவை கண்டது. அதாவது கிட்டத்தட்ட ரூ.1க்கும் கீழ் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. பின் நாளடைவில் முட்டை விற்பனை சற்று வேகமெடுத்து அதிகரிக்க தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதன் காரணமாக முட்டையின் விலையும் தொடர்ந்து உயரத் தொடங்கியது. ஆனால் முட்டை விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கூட்டத்தின் முடிவில் பண்ணை கொள்முதலில் முட்டை ஒன்றின் விலை ரூ.5.05ல் இருந்து 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை கொள்முதல் செய்பவர்களும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். முட்டை விற்பனையின் சரிவால் அதிகம் தேக்கம் அடைந்ததே முட்டை விலை குறைந்ததற்கு காரணம் என்று கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.