இந்திய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த முயற்சி.. பாடத்திட்ட கட்டமைப்பு திட்டம் – வரவேற்கும் ஆசிரியர்கள்!
இந்தியாவில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த 21ம் தேதி மத்திய அமைச்சர் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். தற்போது இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
NCF திட்டம்:
இந்தியாவில் தேசிய கல்வி கொள்கை திருத்தம் செய்யப்பட்டு புதிய கல்வி கொள்கை கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பள்ளியில் கற்றல் இடைவெளி ஏற்பட்டு சென்ற குழந்தைகளை மீண்டும் அவர்களின் கல்வியை தொடர வைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இந்திய கல்வி முறையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கடந்த 21ம் தேதி கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பள்ளி கல்வி, ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர்கள் பயிற்சி கல்வி, பெரியவர்களுக்கான கல்வி என 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் உருவெடுத்துள்ள ஓமிக்ரானின் புதிய வகை – ஷாக்கிங் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது தாய்மொழியில் கல்வி கற்பதையும் ஊக்குவிக்கிறது. தற்போது இந்தியாவில் கல்வி முறைக்கான பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளுக்கான வழிகாட்டியாக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு விளங்குகிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடக்கப்ப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.