சென்னையில் கண்காணிப்பு பணியில் போலீசார் குவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னை நகரில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்காக அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா எதிரொலி:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததால் தமிழக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜூலை 31ம் தேதி மட்டும் மாநிலத்தில் 1,986 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு – முதல்வர் கடிதம்!
குறிப்பாக சென்னை மாநகரில் தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்பட தொடங்கியுள்ளது. சென்னியில் இன்று மட்டும் 204 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இன்று முதல் மார்க்கெட்டுகள், கடை வீதிகள் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றது. அரசு தடை விதிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டத்தையும், கடைகளில் கூட்டத்தையும் கண்காணிக்கிறார்கள்.
TN Job “FB Group” Join Now
அரசின் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்டுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி அளவுக்கு அதிகமான கூட்டத்தை கூட்டும் கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.