ஆகஸ்ட் 9 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – ஆட்சியர் உத்தரவு!

0
ஆகஸ்ட் 9 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 9 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 9 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – ஆட்சியர் உத்தரவு!

தமிழக அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில்‌ நடைமுறைப்படுத்தி கொரோனா மூன்றாம்‌ அலை தொற்று பரவலை கட்டுப்படுத்தும்‌ விதமாக ஈரோடு மாவட்டத்தில்‌ 09.08.2021 முதல்‌ புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து உள்ளார். ஏற்கனவே திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டுப்பாடுகள்:

  • ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால்‌ மற்றும்‌ மருந்தகம்‌ தவிர அனைத்து மளிகை கடைகள்‌, காய்கறி கடைகள்‌, அடுமனைகள்‌ உள்ளிட்ட பிற கடைகள்‌ அனைத்தும்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மாவட்டத்திலுள்ள உணவகங்கள்‌ அனைத்திலும்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை மட்டுமே 50% வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை பார்சல்‌ சேவைக்கு மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது.
  • ஈரோடு மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து தேநீர்‌ கடைகளும்‌ காலை 8.00 மணி முதல்‌ மாலை 5.00 மணிவரை பார்சல்‌ சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • திருமணம்‌ நிகழ்ச்சிகளில்‌ 50 நபர்களுக்கு மிகாமலும்‌, ஈமச்சடங்குகளில்‌ 20 நபர்களுக்கு மிகாமலும்‌ கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
  • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும்‌ ஊராட்சிப்பகுதிகளில்‌ இயங்கும்‌ மீன்‌ மற்றும்‌ இறைச்சி கடைகளில்‌
  • மக்கள்‌ கூடுவதை தவிர்க்கும்‌ பொருட்டு திறந்தவெளியில்‌. தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
  • ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்கள்‌, சுற்றுலாத்தலங்கள்‌ மற்றும்‌ அருங்காட்சியகங்களில்‌ ஞாயிற்றுக்கிழமை மட்டும்‌ பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுகிறது.

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – அரசு பணியில் சேர அரிய வாய்ப்பு

  • மாவட்டத்திற்குள்‌ வரும்‌ பயணிகள்‌ அனைவரும்‌ 72 மணி நேரத்திற்குள்‌ எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை சான்றிதழ்‌ அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள்‌ செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். இல்லையெனில்‌ சோதனைச் சாவடியிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும்‌.
  • ஈரோடு பாவட்டத்தில்‌ வாரச்சந்தைகள்‌, தினசரி சந்தைகள்‌ போன்ற பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும்‌ கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல்‌ பின்பற்றிட நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களாக கண்டறியப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில்‌ இயங்கும்‌ பால்‌, மருந்தகம்‌, மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள்‌ ஆகியவை தவிர பிற கடைகள்‌ அனைத்தும்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!