விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” சீரியல் திடீரென நிறுத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் மக்கள் மனதில் மிகவும் பிடித்தமான சீரியல்கள் வரிசையில் உள்ளது. இந்நிலையில் அந்த சீரியல் முடியப் போவதாக அந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
ஈரமான ரோஜாவே:
மக்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி இடம் உண்டு. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி என அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ரசிகர் வட்டாரம் உண்டு. அந்த சீரியலின் அகிலா வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் கவலையோடு கமெண்ட் போடும் ரசிகர்களின் பீலிங்கை பார்க்கும் போது தான் இந்த சீரியலை ரசிகர்கள் எவ்வளவு ரசித்து இருக்கிறார்கள் என்று தெரிந்துள்ளது.
கணவரை 2 ஆண்டாக பிரிந்த ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – வைரலாகும் வீடியோ!
ஆந்த சீரியல் தற்போது முடியப் போகிறது என செய்தி வெளிவந்துள்ளது. புதிதாக 2 சீரியல்கள் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் எந்த சீரியல் முடிய போகிறது என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் முடியப் போகிறது. இந்த நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் சாய் காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு சில போட்டோஸ்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதில் அனைத்தும் முடிந்தது! இன்று கடைசி நாள் ஈரமான ரோஜாவே படப்பிடிப்பு. ரொம்பவே எல்லோரையும் மிஸ் பண்ணுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதை பார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள முடியப் போகுதா என வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். நாங்களும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். அதுவும் டாம் அண்ட் ஜெர்ரி ஜோடியை நாங்கள் இழப்போம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இப்போது தான் இந்த சீரியலில் விறுவிறுப்பு கூடி உள்ளது ஆனால் இந்த சீரியல் தற்போது திடீரென நிறுத்தப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.