பார்த்திபனிடம் விவாகரத்து கேட்ட காவ்யா – “ஈரமான ரோஜாவே 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே 2” சீரியலில், பிரியா பார்த்தி மீது வைத்துள்ள பாசத்தை பார்த்து காவ்யா பார்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ:
தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களை தந்த விஜய் டிவி தற்போது வெற்றி சீரியல்களின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருவதில் ஆர்வம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே 2 என பல சீரியல்கள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்போது வித்தியாசமான கதை சென்று கொண்டிருக்கிறது. காவ்யாவும் ஜீவாவும் காதலிக்க, ஆனால் விதியின் மாற்றத்தால் ப்ரியாவிற்கும் ஜீவாக்கும், காவ்யாவிற்கும் பார்த்திபனிற்கும் திருமணம் நடக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய தொடர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
ப்ரியா ஜீவா மனதில் இடம் பிடிக்க பல வேலைகளை செய்து வருகிறார். ஆனால் காவ்யாவால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. பார்த்திபன் பல முயற்சிகளை செய்ய ஆனால் ஏமாற்றம் தான் கிடைக்கிறது. அதனால் பல பிரச்சனைகள் வருகிறது. காவ்யா வெற்றியை நினைத்து கவலைப்பட்டு இரவு வராமல் இருக்க கொட்டும் மழையில் பார்த்தி தேடி அலைகிறார். அப்போது காவ்யா வந்துவிட பார்த்திக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது.
Exams Daily Mobile App Download
அப்போது ரம்யா தான் பார்த்தியை கவனித்துக் கொள்வது தெரிய வருகிறது. இந்நிலையில் காவ்யா மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுக்க போகிறார். அது பற்றி பார்த்திபனிடம் அவர் பேசுகிறார். என்னால் எவ்வளவு முயற்சி செய்தும் மாற முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களும் என் மீது வெறுப்புடன் இருக்கின்றனர். அதனால் என்னை விவாகரத்து செய்ய இருப்பதாக சொல்லி விடுங்கள் என சொல்கிறார். பின் பார்த்தியிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுக்க ஆனால் பார்த்திபனிற்கு அது விருப்பம் இல்லாமல் இருக்கிறது.