10, 11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு தாமதமாவது ஏன்??

0
10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு தாமதமாவது ஏன்??
10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு தாமதமாவது ஏன்??
10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு தாமதமாவது ஏன்??

2020-2021 கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாதது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

நோய்த்தொற்று:

2020ம் ஆண்டு ஆரம்பம் முதல் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் ஸ்தம்பித்து விட்டது. அரசு அறிவித்த ஊரடங்கின் காரணமாக பல முக்கிய துறைகள் பாதிப்படைந்தன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இதனால் பெரிதும் பதிப்படைந்தனர். 2019-2020ம் கல்வியாண்டிற்கான இறுதித்தேர்வுகள் எதுவும் மாணவர்கள் எழுத முடியாத சூழலில் அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களை வைத்து இறுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்தது கல்வித்துறை.

2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!!

2020-2021ம் ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் தான் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. சில மாநிலங்களில் பள்ளிகள் ஆரம்பித்து மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானதால் பின்னர் பள்ளிகள் செயல்படுவதை நிறுத்தினர்.

இந்நிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 2020-2021 ம் ஆண்டிற்கான கல்வி ஆண்டை “பூஜ்ஜிய கல்வி ஆண்டாக” அறிவிக்க ஆலோசனை செய்வதாக கூறினார். பின்னர் இந்த ஆலோசனை கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

மாணவர்களின் குழப்பம்:

கடந்த திங்கள் கிழமை 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட விவரங்கள் மற்றும் பொதுத்தேர்விற்கான தேதிகள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அரசு இன்னும் வெளியிடாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது தொடர்பான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!

அமைச்சர் விளக்கம்:

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,”பொது தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறந்து மாணவர்கள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட பின்னர் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும்” என்று கூறினார்.

மேலும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஒரு செய்தி குறிப்பில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும், இந்த தேதிகளில் அடிப்படையில் தான் NEET 2021 மற்றும் (JEE )2021 போன்ற தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!