கல்வி நிறுவனங்கள் இதனை செய்ய கூடாது… இது சட்டப்படி குற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

0
கல்வி நிறுவனங்கள் இதனை செய்ய கூடாது... இது சட்டப்படி குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
கல்வி நிறுவனங்கள் இதனை செய்ய கூடாது... இது சட்டப்படி குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
கல்வி நிறுவனங்கள் இதனை செய்ய கூடாது… இது சட்டப்படி குற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிற அமைப்பினரிடம் இருந்து நன்கொடை வசூலிப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகள் இது போன்று நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்கொடை:

இந்தியாவில் கல்வியை மாணவர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போராடி வரும் நிலையில் சில பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை தாண்டி நன்கொடை என்ற பெயரில் அதிக தொகையை வசூலித்து வருகின்றனர். குறிப்பாக சில தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை அளித்தால் மட்டுமே சீட்டு வழங்கி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் சில பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயத்தின் பேரில் நன்கொடை வசூலித்து வருகின்றனர். ஏற்கனவே மக்கள் கொரோனா காலத்தில் சந்தித்த ஊரடங்கு போன்றவைகளால் பொருளாதார ரீதியாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நேரத்தில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களிடம் நன்கொடை வசூலிப்பது முறையற்றதாக இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நன்கொடைக்கு வசூலிப்பது இயல்பான ஒன்றாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது போன்று கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கவும் , விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கவும் இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!