தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிகளில் 100% மாணவர்களுடன் வகுப்புகளை முழுவதுமாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

முழு நேர வகுப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் காரணமாக 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது.

Airtel நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – உடனே பாருங்க..!

அத்துடன் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!

அரசு 100% மாணவர்களை கொண்டு வகுப்புகளை நடத்த அனுமதி கொடுத்தாலும் ஏராளமான பள்ளிகளில் 2 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 2 நாட்கள் என்று குறைந்த நாட்களில் வகுப்புகள் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. அதனால் பள்ளி நிர்வாகத்தினருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதில் கூறியதாவது, ஏற்கனவே பல விடுமுறை நாட்களில் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படவில்லை. தற்போது மீதமுள்ள நாட்களை முழுவதுமாக பயன்படுத்தி பாடங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!