TNPSC போட்டித்தேர்வுகள் எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி – தேர்வாணையம் வெளியீடு!

1
TNPSC போட்டித்தேர்வுகள் எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC போட்டித்தேர்வுகள் எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC போட்டித்தேர்வுகள் எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி – தேர்வாணையம் வெளியீடு!

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட அறிவுரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி TNPSC தேர்வு எழுத கல்வித்தகுதி எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி கல்வித்தகுதி:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். இந்நிலையில் TNPSC மூலமாக நடத்தப்படும் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!

மேலும் விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், விதிகள், அரசாணைகள், தேர்வாணைய நடைமுறை விதிகள் போன்றவற்றை உள்ளடக்கிய விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை வெளியிடப்படுகின்றன. மேலும் 20.09.2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி,

  • தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிப்புகளுக்கு அனுமதிக்க தகுதி பெறும் வகையில் பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழகத்தில் பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • ஒரு நபர் பதினோரு ஆண்டுகள் பள்ளி இறுதித்தேர்வு எழுதியிருந்து , ஒவ்வொரு பாடத்திலும் ஒரே முறையிலோ அல்லது பகுதி முறையிலோ 35 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால் அவர் பள்ளி இறுதி தேர்வில் தெரியவராக கருதப்படுவார்.

Join Our TNPSC Coaching Center

  • ஒரு நபர் 11 ஆண்டு பள்ளி இறுதித்தேர்வு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெற தவறி, தோல்வியுற்ற அந்த பாடம் அல்லது பாடங்களில் 10 ஆண்டு பள்ளி இறுதித்தேர்வு எழுதி 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார்.
  • ஒரு நபர் 11 ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் விருப்பப் பாடம் எடுத்து படித்து அந்த விருப்ப பாடத்தில் தோல்வி அடைந்திருந்து, விருப்பப் பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.
  • ஒரு நபர் தமிழ்நாடு திறந்தவெளி பள்ளி குழுமத்தினால் நடத்தப்படும், 10 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தால் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. முதலில் ஒரு கிராமத்தையே நிர்வாகம் செய்யும் ஒரு அரசு அதிகாரியை குறைந்தது ஒரு பட்ட படிப்பாவது வேண்டாமா ? ஆங்கிலேயர் காலத தில் இருந்த அதே கல்வி தகுதி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!