தமிழக தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டன. பள்ளிகளில் மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக தேர்வுகள் நடத்த முடியாததால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு – 11 மாவட்டங்களில் மட்டும்!
இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்படாததால் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என பதிவிட்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அனைத்து தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 75 சதவிகிதம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தொகையை இரு தவணையாக செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.