TN TRB தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறையின் புதிய உத்தரவு!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022 ம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதியுடன் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஜூன் 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு பிறகு 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ம் தேதியும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் சம்பளம் ரத்து!
இந்த நேரத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற இணை இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Exams Daily Mobile App Download
இந்த காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2021 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ஆசிரியர்கள் விவரம் அனுப்பிட வேண்டும். மின்னஞ்சல் அனுப்பட்ட விவரங்களின் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ( Eligible vacancy ) தானா என்பதை உறுதிசெய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.