நாட்டில் கல்வி கடன் இலக்கை 13.5% ஆக குறைத்த பொதுத்துறை வங்கிகள் – அதிர்ச்சியில் மாணவர்கள்!!
நாட்டில் சாமானிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களின் கல்வி படிப்பிற்காக வங்கிகளிடம் கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி கடன் விநியோகத்தை அதிரடியாக குறைத்துள்ளன.
கல்வி கடன்
நாட்டில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி படிப்பிற்காக மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பிற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனாலும் மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி மேற்படிப்பை தொடர்வதற்கும் மற்றும் பிற காரணங்களுக்காகவும் வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
Follow our Instagram for more Latest Updates
இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்வி கடன்களுக்கு மாணவர்கள் எந்த ஒரு பாத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு மூன்றாம் தரப்பினரிடம் உத்தரவாதம் பெற்று கடன்களை பெற்றுக் கொள்ளலாம். இதை போன்று ரூ.7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்வி கடன்களுக்கு ஏதேனும் பத்திரத்தை சமர்ப்பித்து வங்கி கடன்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஆதார் எண்கள் மின்நுகர்வோர் எண்களுடன் இணைப்பு – மத்திய அரசு அறிவுறுத்தல்!
Exams Daily Mobile App Download
நாட்டில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி கடன்கள் ரூ.23,640 கோடியாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி கடன்களின் விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளன. அதன்படி நடப்பு ஆண்டில் ரூ.20,450 கோடி வரை கல்விகளுக்கான கடன் வழங்கலாம் என இலக்கை நிர்ணயித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இந்த ஆண்டு கல்வி கடன்களை 13.5% ஆக வழங்க உள்ளதாக இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனாலும் வங்கிகள் நிர்ணயித்த இலக்கை விட அதிகமாகவே கடன் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.