தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகை! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் நலத்துறை சார்பில் போஸ்ட் மெட்ரிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி முதல் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
போஸ்ட் மெட்ரிக்:
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் ஆகிய ஆகிய மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று கல்வி உதவித்தொகை திட்டம். இந்த திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. அதன்படி தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – RBI பட்டியல் வெளியீடு!
அண்மையில் மத்திய அரசு மத்திய அரசு உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பை உயர்த்தியது. அந்த வகையில் 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கலாம் என்று உத்தரவிட்டது. இதன் மூலம் கூடுதல் எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 13ம் தேதி முதல் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச வேஷ்டி, சேலை அனுப்பும் பணிகள் துவக்கம்!
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து ஜாதிச்சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். அதற்காக உதவி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். மேலும் மத்திய அரசின் பிரீபோஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான, ப்ரி போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் விண்ணப்ப பதிவும் தொடங்கவுள்ளது.