மத்திய அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை – நாளை கடைசி நாள்!
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க நாளை (ஜூன் 30) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி ஊக்கத்தொகை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்போது வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. 2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் அனைத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆண்டுதோறும் மாணவர்கள் நலன் கருதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
தமிழக பேருந்துகளில் கொடைக்கானல் பயணிக்க ஆதார் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஊக்கத்தொகை குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஓர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,500 முதல் ரூ.13,500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் அனைவரும் தற்போதைய ஆண்டுக்கான ஊக்கத்தை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதன்படி 2021- 22 ஆம் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியல் இன மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நாளை தான் கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் இத்தகைய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை அதிகாரபூர்வ தளத்தில் காணலாம்.