பிப்ரவரி 7 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

0
பிப்ரவரி 7 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு - கல்வித்துறை உத்தரவு!
பிப்ரவரி 7 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு - கல்வித்துறை உத்தரவு!
பிப்ரவரி 7 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில் வருகிற திங்கட்கிழமை (பிப்.7) முதல் மீண்டும் ஒரு மாத காலம் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளிகள் விடுமுறை:

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏகப்பட்ட உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் உண்டானது. பின்னர் அந்தந்த அரசுகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததால் கொரோனா தொற்று பரவல் குறைந்தது. இதனால் சுகாதாரத்துறை, மருத்துவ குழுவினர் ஆகியோரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இந்தியாவிலும் மாநில வாரியாக பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இலங்கையில் பள்ளிகளுக்கு ஒரு மாத காலம் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு எதிர்வரும் பிப்ரவரி 07 ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உயர்தர பொதுத்தேர்வின் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – குரூப் 2 & குரூப் 2 A இம்மாதம் அறிவிப்பு!

அதன் பின்னர் மார்ச் 7, 2022 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் தற்போது சற்று குறைந்து வரும் போதிலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!