தமிழகத்தில் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை ஏற்பாடு!
எந்த சிரமமும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வை சந்திக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே வினாடி வினா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
வினாடி வினா:
தற்போதெல்லாம் தமிழகத்தில் கல்லூரி படிப்புகள் மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டபடிப்புக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருக்கும். ஆனால், தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் கூட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விருப்பப்பாடத்தை எடுத்து படிக்க முடியும். பல அரசு பள்ளி மாணவர்களும் இந்த நுழைவுத்தேர்வை சந்திக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அதாவது 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட நுழைவுத்தேர்வை சந்திக்க பயப்படுகின்றனர்.
ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதனால் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அரசுப் பள்ளிகளிலே 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்காக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் பொருட்டு அந்தந்த பள்ளிகளிலேயே வினாடி வினா நடித்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு வினாடி வினா கேள்விகள் எடுக்கப்படும் எனவும், கேள்விகள் (MCQ) வடிவில் தயாரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடத்திட்டங்களில் இருந்து தான் வினாடி வினா கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு பள்ளிகளிலும் வினாடி வினா ஹைடெக் ஆய்வகத்தில் கிடைக்கும். மேலும், மாணவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு பிறகு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.