TN TRB இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 – பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!

0
TN TRB இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!
TN TRB இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!
TN TRB இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 – பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக TRB செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 01.06.2022 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய உத்தரவு:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2022 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என ஏராளமானோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். TN TRB வருடாந்திர அட்டவணையின் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மாதம் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 57 வயது வரை இருக்க வேண்டும். TN TRB இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பிஜி, பி எட் முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி நேரடியாக வீட்டிற்கே பணம் டெலிவரி!

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை, அதிகாரப்பூர்வ படிவத்தில் பூர்த்தி செய்து 05.06.22 க்குள் இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் முகவரிக்கு ( [email protected] ) அனுப்பி வைக்கவும். மேலும் அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2021 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள், அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் தானா என்பதை உறுதிசெய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!