தமிழகத்தில் கல்வி, மருத்துவ திட்டங்கள் இலவசம் இல்லை – முதலமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் இன்று கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கூறியன பற்றி பார்ப்போம்.
நலத்திட்டங்கள்
தமிழகத்தில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து வாக்குறுதியில் அளித்தவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதில் முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கென்று இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட நலத்திட்டங்களை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன் இதன் மூலமாக சாமானிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து, தமிழக முதல்வர் இன்று கொளத்தூர் தொகுதியில் பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டி காட்டி பேசியுள்ளார்.
இந்தியாவில் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை – அமைச்சர் அறிவிப்பு
Exams Daily Mobile App Download
மேலும் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் கூறியுள்ளார். அத்துடன் இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன், காலை சிற்றுண்டி, மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் நல திட்டங்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பெருமையுடன் கூறினார். இதையடுத்து மாணவிகள் அனைவரும் பட்டப்படிப்பு முடிந்தவுடன் தங்களுக்கென தகுதியான வேலைகளில் பணி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.