தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை வேண்டாம் – எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!
தமிழகத்தில் முன்னர் இருந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் மீண்டும் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்
லாட்டரி சீட்டுகள்:
தமிழகத்தில் பொதுமக்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் மீண்டும் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடங்குவதற்கான முயற்சிகளை திமுக அரசு செய்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். கடந்த 2003ம் ஆண்டுக்கு முன்னர் வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர், தமிழக மக்களின் நலன் கருதி லாட்டரி சீட்டுகள் விற்பனையை அப்போதைய அதிமுக அரசு தடை செய்தது.
போட்டித்தேர்வு மதிப்பெண்கள் படி சிவில் நீதிபதிகள் பணிமூப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு!
தற்போது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்து தமிழக அரசுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் வெளிமாநில் லாட்டரிகள் அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குதிரை ரேஸ், சீட்டாட்டம் போன்ற பல சூதாட்டங்கள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பல ஏழை, எளிய மக்கள் லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும் வாழ்க்கையையும் இழந்தனர். தனியார் லாட்டரிகளால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்த அவலமும் நிலவியது.
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH முடிஞ்சுருச்சா, இல்லையா?
கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மட்டுமே ஒரே நாளில் தமிழகத்தில் இருந்து லாட்டரி சீட்டு முறையை தடை செய்தார். தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு வருவாய் ஈட்டும் நோக்கில் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டுகளை விற்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிகாரப்பூர்வ லாட்டரி திட்டத்தை திமுக அரசு கைவிட்டு விட்டு வருவாயை பெருக்க பல நல்ல வழிகளை தேட வேண்டும் என்றும், அதையும் மீறி தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை கொண்டு வந்தால் முக ஸ்டாலின் அரசு தமிழக மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்று பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.