தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பிப்.7 முதல் பிரச்சாரத்தை துவக்கும் எடப்பாடி பழனிசாமி!

0
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் - பிப்.7 முதல் பிரச்சாரத்தை துவக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் - பிப்.7 முதல் பிரச்சாரத்தை துவக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பிப்.7 முதல் பிரச்சாரத்தை துவக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் இம்மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 7ம் தேதி முதல் பிரச்சாரத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி அமைப்புகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று துவங்கிய நிலையில், இன்றுடன் (பிப்.4) முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கும் வேளையில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் இப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவை ரூ.2 லட்சம் எப்போது? அரசின் முடிவு என்ன?

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 7ம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநிலத்தில் மீண்டும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி முடிவு!

அந்த வகையில் பிப்ரவரி 7ம் தேதியன்று, சிவகாசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எடப்பாடி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார். இதனை தொடர்ந்து,

  • பிப்ரவரி 8 – மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி.
  • பிப்ரவரி 10 – வேலூர், ஆவடி, தாம்பரம், காஞ்சீபுரம்.
  • பிப்ரவரி 11 – வடசென்னை, தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்.
  • பிப்ரவரி 14 – கோவை, திருப்பூர், ஈரோடு
  • பிப்ரவரி 15 – கும்பணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!