ECIL Technical Officer நேர்காணல் 2021 ஒத்திவைப்பு !!
இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து அதன் பணியிட நேர்காணல் பணிகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதிவாளர்கள் அது குறித்த விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பொதுமுடக்கம் :
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதன் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழவதும் அந்தந்த மாநிலங்களின் தொற்றின் அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முன்னரே திட்டமிடப்பட்டு இருந்த பலதரப்பட்ட பணிகள் தள்ளி போடப்பட்டுள்ளன. அவற்றிற்கான அறிவிப்புகளும் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளது.
ECIL நேர்காணல் ஒத்திவைப்பு :
இந்நிலையில் ECIL ஆணையம் ஆனது அங்கு Technical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக கடந்த மாதத்தில் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்பவர்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நேர்காணல் ஆனது வரும் 07 06.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த நேர்காணல் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.