8 வது முடித்தவர்களுக்கு தமிழக ECHS வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்..!
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Chowkidar, Nursing Assistant,Pharmacist போன்ற பல்வேறு பணிகளுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Chowkidar, Nursing Assistant,Pharmacist போன்ற பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என்று மொத்தமாக 07 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS,BDS, 12th, B.Pharma/ D.Pharma,DMLT , 08th என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.75,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு தகுதி மற்றும் திறன் வாய்ந்தவர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.