டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி – பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. நிலைமையை சரி செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரனமாக கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது. மே மாதம் முதல் கொரோனா பாதிப்பு 4 லட்சமாக பதிவாகி வந்த நிலையில் தற்போது 40 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழக மின்வாரிய களப்பணியாளர்கள் கவனத்திற்கு – கழக இயக்குனர் அறிக்கை!
கொரோனா பரவலில் இருந்து பல மாநிலங்கள் மீண்டு வரும் நிலையில் டெல்டா வைரஸ் எனப்படும் கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ் தாக்கம் பரவல் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருகிறது. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும் டெல்டா வைகையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மணிப்பூரில் அடுத்த 10 நாட்களுக்கும், மிசோராமில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் திரிபுராவில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைநகரான அகர்தாலா மற்றும் 11 நகராட்சி அமைப்புகளின் கீழ் வரும் பகுதிகளில் ஜூலை 19 முதல் 23 காலை வரை பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே கல்விக்கட்டணம் வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!
சிக்கிமில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை 155 சதவிகிதம் அதிக பாதிப்பு ஏற்பட்டது. எனவே அடுத்த 30 நாட்களுக்கு பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது.