நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வு – மத்திய அரசின் அறிவுறுத்தல்! பொதுமக்கள் அதிர்ச்சி!

0
நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வு - மத்திய அரசின் அறிவுறுத்தல்! பொதுமக்கள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வு - மத்திய அரசின் அறிவுறுத்தல்! பொதுமக்கள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வு – மத்திய அரசின் அறிவுறுத்தல்! பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் மின்சார துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்ய மின் கட்டணத்தை உயர்த்த மின்சார விநியோக நிறுவனங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் நாடு முழுவதுமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

மின்கட்டணம் உயர்வு:

இந்தியாவில் பரவிய கொரோனா தாக்கத்தில் நாடும் நாட்டு மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். குறிப்பாக பொருளாதார சரிவு. ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்த்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட மின் பகிர்மான கழகங்கள் அதிக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் அவற்றின் வட்டி சுமை தொடர்ந்து அதிகரிக்கிறது. 2019 -2020ம் ஆண்டில் மட்டும் 5.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Group 2 அறிவிப்பு 2022 – ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை..!

பல மாநிலங்களின் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டண விவரங்களை தாமதமாக சமர்ப்பிக்கின்றனர். மேலும் அதில் பிரதிபலிக்காத கட்டண விவரங்களை அளித்து இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. குறைந்த விலையில் மின் விநியோகம் செய்யும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் போன்ற மானியத் தொகையை சரியான நேரத்தில் சமர்பிபதில்லை. அதனால் மாநில அரசுகளின் கடன் பாக்கி, ரூ.59, 489 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் விநியோக நிறுவனங்கள் 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளனர்.

TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன் | உடனே பாருங்க..!

இந்த நிதி நெருக்கடியை ஈடு செய்ய மின் நுகர்வு கட்டணத்தை உயர்த்த மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க இந்த நடவடிக்கையை மாநிலங்கள் மேற்கொண்டால் கொண்டால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணம் உயரும் நிலை உருவாகும். இதனால் மின் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தாக்கத்திலிருந்தே மக்கள் மீண்டு வர முடியாமல் உள்ள நிலையில் விலைவாசி உயர்வு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மின் கட்டணமும் உயருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!