குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
நாட்டின் அனைத்து மக்களுக்கும் முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் அட்டையினை அனைத்து குடிமக்களும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதனை குழந்தைகளுக்கு எவ்வாறு விண்ணப்பித்து பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகளுக்கு ஆதார்:
இந்திய நாட்டில் உள்ள அனைவருக்குமே முக்கிய அடையாள ஆவணமாக ஆதாரை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டினை எடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வழங்கியுள்ளது. முன்னதாக நேரடியாக ஆதார் மையத்திற்கு மட்டுமே சென்று ஆதார் கார்டு பெற முடியும். ஆனால் தற்போது ஆன்லைனில் ஆதார் அட்டை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசானது குழந்தைகளுக்கு 2 வகையான ஆதாரை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 4 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது? ஊழியர்கள் அகவிலைப்படி கோரி போராட்டம் அறிவிப்பு!
5 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் அடையாளங்கள் ஏதும் இல்லாமல், ஆதார் எண் தொடர்பான விவரங்கள், மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆதாரில் கொடுக்கப்பட்டிருக்கும். பால் ஆதார் கார்டு நீல நிறத்தில் இருக்கும். குழந்தைகள் 5 வயது வரை இந்த பால் ஆதார் செல்லுபடியாகும். அதன் பிறகு அதாவது குழந்தையின் 5 வயதிற்கு பிறகு குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டும். இதேபோல் குழந்தை 15 வயதை எட்டும் போதும் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
5 வயதிற்கு மேலாக உள்ள குழந்தையின் ஆதாரை புதுப்பிக்க பிறப்பு சான்று அல்லது போட்டோவுடன் கூடிய ஐடி கார்டினை எடுத்து செல்ல வேண்டும். இதனுடன் பெற்றோரின் ஆதார் விவரங்களும் இணைக்கப்படும். இந்த செயல்முறை ஆதார் மையத்தில் மேற்கொள்ளப்படும். இந்த செயல்முறையினை ஆன்லைனில் முடிக்க https://appointments.uidai.