தமிழகத்தில் குழந்தைகளுக்கு எளிதாக பிறப்புச் சான்றிதழ் – உரிமைகள் சட்டம்!
தமிழகத்தில் குழந்தைகளுக்கான சேவை உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அத்தியாவசிய தேவையான பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை மிக எளிமையாக பெற முடியும் என்று குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
சேவை உரிமைகள் சட்டம்:
மதுரை ஆனையூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்ட குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து சேவை உரிமைகள் சட்டம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கிராம ஒன்றியம், மாவட்டம், நகராட்சி, மாநகர் உட்பட 6 வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்.
குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டையை வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யும் முறை!
மேலும் குழந்தைகளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெறுவதற்கு சேவை உரிமைகள் சட்டம் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் சேவை உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும். தமிழகத்தில் சேவை உரிமைகள் சட்டத்துக்கும் அரசு அலுவலகங்களில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் தற்போது சாலை விபத்தில் தனது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்று தரும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கலில் தவிக்கும் நிலை தவிர்க்கப்படும் என்று ஆணைய உறுப்பினர் அவர்கள் தெரிவித்துள்ளார்.