தமிழக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை – கல்வித்துறை விளக்கம்! மாணவர்கள் மகிழ்ச்சி!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது குறித்த அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன.மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தி வந்தன. பொது தேர்வுகள் ஏதும் நடத்தாமலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டன.நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி மூன்றாவது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில் திறந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
தற்போது,கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால், பாடத்திட்டங்களை குறுகிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தன.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி இறுதி தேர்வு கட்டாயமா? கல்வித்துறை விளக்கம்!
இதை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தபடி இருக்கிறது.சாதி வெறி , பஸ்களில் படிக்கட்டில் தொங்கி செல்லுதல், ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்கள் என மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்