தமிழகத்தில் இ-பதிவு இணையதளம் திடீர் முடக்கம் – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் ஜூன் 7 முதல் சுய தொழில் செய்பவர்கள் இ- பதிவுடன் தொழிலை தொடங்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் அனைவரும் ஒரே நேரத்தில் பதிய முற்பட்டதால் இ-பதிவு இணையதளம் முடங்கியுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இ – பதிவு இணையதளம் முடக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் முதல் கட்ட நடவடிக்கையாக 14 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து வணிக வளாகங்கள், அலுவலகங்கள், கடைகள் போன்றவை இயங்க அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் நோய் தொற்று பரவல் குறையாமல் அதிக அளவு உயர்ந்தது. இதனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 7 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது காய்கறி, மளிகை, பழங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்க அரசு தடை விதித்தது. நகராட்சிகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. இந்த தளர்வில்லா முழு பொது முடக்கத்தின் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் இறங்கு முகத்தில் உள்ளது. இதனால் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் படி இன்று (ஜூன் 7) முதல் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.
முத்தரசு பற்றிய உண்மையை மாயனிடம் சொல்ல வரும் ஐஸ்வர்யா – சூடுபிடிக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’!
மேலும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பகுதிகளில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தானாக முதலீடு செய்து சுய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சுய தொழில் செய்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இ-பதிவிற்கு விண்ணப்பித்ததால் அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் சுய தொழிலாளர்கள் இ-பதிவு பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பொது மக்கள் அவசர காரணங்களுக்கு இ-பதிவு பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.